Tuesday, December 2, 2014

காதல்..!

அவளுக்காக
என்னையவே கொடுக்கத்
துணிந்தேன்- எதனால்..?

பல பிரச்சனைகளை தாண்டி
அவளுக்காக பலரிடம்
சண்டை போட்டேன் - எதானால்..?

என்னிடம் பெற்றோர் பேசும்
 ஒவ்வொரு வார்த்தைக்கும்
மெளனமாய் என்
பதில் இருந்தது - எதனால்..?

நண்பர்கள் சொல்லும்
வார்த்தைகளை
கேளா செவிடனாய் 
மாறினேன் - எதனால்..?

தினம் தினம்
உன்னை பார்க்க 
கால் நெடுக்க காத்துக்
கொண்டிருந்தேன் - எதனால்..?

 உன் கண்கள் 
என்னை பார்க்காதா 
என எதிர்பார்த்தேன்  - எதனால்..?

உன்னிடம் பேசுவது
போல் மற்றவர்களிடம்
என்னால் பேச 
முடியவில்லை - எதனால்..?

எதனால் என்ற
கேள்விக்கு பதில்
கடைசியில் காதலாக முடிகிறது..
                                          - காதல்..

No comments:

Post a Comment