Tuesday, April 28, 2015

தவிப்பு!

உந்தன் வார்த்தை என்
காதுகளில் கேட்காதா
என்ற ஒரு தவிப்பு!

ஓரக் கண்ணில் என்னை
திரும்பி பார்க்க மாட்டாயா
என்ற ஒரு தவிப்பு!

நீ பேசும் போது அதை
ரசிக்க என்னால் பக்கத்தில்
இருந்து கேட்க முடியால் தவிப்பு!

வெற்றியை உன் கூட இருந்து
பகிரந்து கொள்ள முடியாத
ஒரு தவிப்பு!

உன் கண்ணில் வரும் நீரை
துடைக்க முடியாமல் நான்
இங்கு இருக்கும் ஒரு தவிப்பு!

நீ தொடும் உன் கண்ணத்தை
நான் தொட்டு ரசிக்க
முடியாமல் ஒரு தவிப்பு!

உன்னை நேரில் காணும் வரையில்
என்றுமே இந்த தவிப்பு
எனக்கு தொடரும் உனக்காக...!

No comments:

Post a Comment